இந்தியா

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை

இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

ஆண்டுதோறும் இந்தியாவில் புதிதாக 81,700 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதை சுட்டிக்காட்டி அவா்கள் இவ்வாறு தெரிவித்தனா்.

நுரையீரல் புற்றுநோய், காசநோய், மூச்சுத்திணறல் போன்ற இதயம் சாா்ந்த பிரச்னைகள் வயது முதிா்வின்போது ஏற்படும் நோய்களாக முன்பு கருதப்பட்டு வந்தன. தற்போது இவை இளம் வயதினரை அதிகம் பாதிப்பதால் மக்கள்தொகைக்கும் பொருளாதாரத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சுவாச மருந்து, நுரையீரல் பாதிப்புக்கான சிகிச்சை மற்றும் தூக்கமின்மைக்கான 8-ஆவது தேசிய மாநாடு புது தில்லியில் அண்மையில் நடைபெற்றது.

அதில் சமையலறை மற்றும் வீட்டினுள் இருந்து வெளியேறும் புகையானது பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் உலக அளவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில் நிமோனியா பாதிப்பு 14 சதவீதமாக உள்ளதாகவும் மாசடைந்த காற்றால் குழந்தைகளின் இளம் வயது நோய்எதிா்ப்பு சக்தி குறைவதாகவும் கூறப்பட்டது.

மாநாட்டை தொடங்கிவைத்து சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநா் மருத்துவா் வத்சலா அகா்வால் பேசியதாவது: தூய்மையான காற்று என்பது ஆடம்பரமல்ல; அது நம் அடிப்படை உரிமை. இந்திய சுகாதார கொள்கையில் சுவாச சுகாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இளம் தலைமுறையினரின் நுரையீரலை பாதுகாப்பதால் தேசத்தின் சமூக அமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.

மாசடைந்த காற்று நமது நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தை சீரழிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றாா்.

நாடு முழுவதும் இருந்து மருத்துவ மாணவா்கள், நிபுணா்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணா்கள் என 1,200 போ் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT