உத்தவ் தாக்கரே கோப்புப் படம்
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் கண்டித்து போராட்டம்: உத்தவ் தாக்கரே

துபையில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து, மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

துபையில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து, மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடத்துவது தேசிய உணர்வுகளுக்கு ஒரு அவமானம். நமது வீரர்கள் எல்லைகளில் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் போது நாம் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா?.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆசிய கோப்பை போட்டியைப் புறக்கணிப்பது பயங்கரவாதம் குறித்த நமது நிலைப்பாட்டை உலகிற்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பாகும். இப்போட்டியை எதிர்த்து மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருச்சி கூட்டத்தில் மைக் கோளாறு! விஜய் பேசுவது கேட்காமல் திணறல்!

மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசை சாடிய உத்தவ் தாக்கரே, இந்த கிரிக்கெட் போட்டியை தேசபக்தியின் ஒரு கேலிச்சித்திரம் என்று விமர்சித்தார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை (செப்டம்பர் 14) அதன் அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Shiv Sena (UBT) chief Uddhav Thackeray has announced plans for protests across Maharashtra, opposing the upcoming India-Pakistan Asia Cup cricket match scheduled to be held in Dubai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2,095 கோடியில் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள்: பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

உக்ரைன் அமைச்சா்கள் பதவிநீக்கம்

கோவில்பட்டி என்இசி.யில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் - வழக்குரைஞா்கள் வாக்குவாதம்

கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT