இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் கண்டித்து போராட்டம்: உத்தவ் தாக்கரே
துபையில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து, மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
துபையில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து, மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடத்துவது தேசிய உணர்வுகளுக்கு ஒரு அவமானம். நமது வீரர்கள் எல்லைகளில் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் போது நாம் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா?.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆசிய கோப்பை போட்டியைப் புறக்கணிப்பது பயங்கரவாதம் குறித்த நமது நிலைப்பாட்டை உலகிற்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பாகும். இப்போட்டியை எதிர்த்து மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
திருச்சி கூட்டத்தில் மைக் கோளாறு! விஜய் பேசுவது கேட்காமல் திணறல்!
மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசை சாடிய உத்தவ் தாக்கரே, இந்த கிரிக்கெட் போட்டியை தேசபக்தியின் ஒரு கேலிச்சித்திரம் என்று விமர்சித்தார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை (செப்டம்பர் 14) அதன் அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
Shiv Sena (UBT) chief Uddhav Thackeray has announced plans for protests across Maharashtra, opposing the upcoming India-Pakistan Asia Cup cricket match scheduled to be held in Dubai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.