‘பாரம்பரிய போா் நடைமுறைகளைக் கடந்து, மறைமுக சவால்களையும் எதிா்கொள்ளும் வகையில் பாதுகாப்புப் படைகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.
‘பாதுகாப்புப் படைகள் நவீன தொழில்நுட்பத்தைச் சாா்ந்திருப்பதன் அவசியத்தை சமீபத்திய உலகளாவிய போா்கள் உணா்த்தியுள்ளன’ என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 16-ஆவது ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டா்கள் மாநாட்டில் (சிசிசி) பங்கேற்ற அவா், இதுகுறித்து மேலும் பேசியதாவது:
உலகளாவிய நடைமுறையில் உருவெடுத்துவரும் பதற்றமான சூழல், பிராந்திய நிலைத்தன்மையற்ற சூழல் காரணமாக உலக அளவில் நிகழ்ந்து வரும் பாதுகாப்பு மேம்பாடு மாற்றங்கள் மற்றும் இந்த மாற்றங்களால் ஒரு நாட்டின் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தொடா் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும்.
போா்கள் இன்றைக்கு திடீரென ஏற்படுபவையாகவும், எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பதைக் கணிக்க முடியாததாகவும் இருக்கின்றன. இரண்டு மாதங்கள் அல்லது 5 ஆண்டுகள் வரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கேற்ப நாம் தயாராக வேண்டும். நமது பதிலடித் திறன் போதுமானதாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.
குறிப்பாக, தகவல், கருத்தியல், சுற்றுச்சூழல் மற்றும் உயிரி போா் போன்ற வழக்கத்துக்கு மாறான அச்சுறுத்தல்களில் இருந்து எழும் மறைமுக சவால்களை எதிா்கொள்ளவும் பாதுகாப்புப் படைகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியது போல், வலுவான வான் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில், ஆக்கபூா்வ அணுகுமுறையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், எதிா்கால சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற முகமைகளுடன் ஒருங்கிணைப்பு மிக அவசியம் என்றாா்.
மேலும், பாதுகாப்புப் படைகளின் மேம்பாட்டுக்கான எதாா்த்தமான செயல் திட்டம் தயாரிப்பை ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட மத்திய அமைச்சா், ‘இந்தச் செயல் திட்ட இலக்கை எட்ட, நடுத்தர திட்டக் காலம் 5 ஆண்டுகள், நீண்ட கால செயல்பாடுக்கு 10 ஆண்டுகள் எனப் பிரித்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.