முகப்பு
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை என ராஜ்நாத் சிங் உறுதி..

Updated On : 17 செப்டம்பர், 2025 at 1:12 PM
ராஜ்நாத் சிங்
பகிர்:

ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டதாகக் கூறியதைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளார்.

மத்திய அரசு ஏற்பாடு செய்த ஹைதராபாத் விடுதலை நாள் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் ஏதேனும் நடந்தால் ஆப்ரேஷன் சிந்தூர் மீண்டும் தொடங்கும்.

Advertisement

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் யாரோ ஒருவரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டதா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நான் அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை யாரோ ஒருவரின் தலையீட்டால் இடைநிறுத்தப்படவில்லை.

பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தார், மோதலில் மூன்றாம் தரப்பு பங்கை இந்தியா நிராகரித்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

இது இருதரப்புப் பிரச்னை, மூன்றாம் தரப்பு தலையிட முடியாது என்றும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார் என்று அவர் கூறினார்.

summary

Defence Minister Rajnath Singh on Wednesday virtually rejected US President Donald Trump's claims of intervening to stop the Indo-Pak conflict following Operation Sindoor, saying the action against terrorists was not suspended due to any third-party mediation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.