வைஷ்ணவி தேவி கோயில்  
இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்

மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட யாத்திரை மீண்டும் தொடக்கம்..

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

ரியாசி மாவட்டத்தின் கத்ரா பகுதியில் உள்ள திரிகூட மலையில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 34 பக்தா்கள் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா். இதனால் வருடாந்திர யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

தொடா்ந்து மோசமான வானிலை நிலவிய சூழலில், 22 நாள்களுக்குப் பிறகு யாத்திரை புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால், சில மணி நேரத்திலேயே நிறுத்தப்பட்டதால், பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

வியாழக்கிழமை வானிலை சீரடைந்ததால், யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டா் சேவையைப் பயன்படுத்த விரும்புவோா், அதற்குப் பதிவு செய்து கொள்ளலாம் என்று கோயில் வாரியம் அறிவித்துள்ளது.

யாத்திரை சுமுகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், அடிவார முகாமில் பல நாள்களாக காத்திருக்கும் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Registration for the pilgrimage to the cave shrine of Mata Vaishnodevi resumed on Thursday morning after authorities decided to give a go ahead for the yatra that was briefly suspended due to inclement weather.

இதையும் படிக்க: கல்கி ஏடியில் தீபிகா படுகோன் இல்லை... தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

நவ.29-இல் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT