கோப்புப்படம்.  
இந்தியா

சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகான் மாவட்டத்தில் உள்ள ரவாஸ்வாஹி கிராமத்தில் சனிக்கிழமை இரவு கபடி போட்டி நடைபெற்றது. அப்போது பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம் உயர் அழுத்த மின் கம்பியின் மீது உரசியுள்ளது.

இதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் பலியாகினர். மேலும் பலர் தீக்காயங்களுக்கு ஆளானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

உள்ளூர் கிராமவாசிகள் பாதிக்கப்பட்ட ஆறு பேரை விஷ்ராம்புரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு!

காயமடைந்த மூன்று பேரில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால், மேம்பட்ட மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்கள் சதீஷ் நேதாம், ஷியாம்லால் நேதாம் மற்றும் சுனில் ஷோரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

A storm caused an 11-kV power line to touch the iron pole of the tent erected on the ground for viewers to watch the game, resulting in several of them receiving an electric shock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT