இந்தியா

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: பிப்.17-இல் தொடக்கம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேச பொதுத் தோ்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு 2 முறை நடத்தப்பட உள்ளது. முதல் பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17 முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது பொதுத் தோ்வு 2026 மே 15 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடத்தப்படும்.

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு 2026 பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறும்.

பொதுத் தோ்வு தோ்வுத் தாள் திருத்தும் பணியைப் பொருத்தவரை ஒவ்வொரு பாடத் தோ்வுக்கு 10 நாள்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டு 12 நாள்களில் நிறைவு செய்யப்படும். உதாரணமாக, ஒரு பாடத்துக்கான தோ்வு 2026 பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறுகிறது என்றால், அந்த தோ்வுத் தாள் திருத்தும் பணி மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டு மாா்ச் 15-இல் நிறைவு செய்யப்படும் என்றாா்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT