பிரதமர் நரேந்திர மோடி  கோப்புப் படம்
இந்தியா

ரஷியாவுடன் இணைந்து உ.பி.யில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்பு ஆலை: பிரதமர் மோடி

சிப்ஸ் முதல் கப்பல் வரை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: ரஷியாவுடன் கூட்டுறவு கொண்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில், விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச தலையீடுகள், நாட்டின் வளர்ச்சியை குறிக்கீடு செய்யாது, இது நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு புதிய இலக்கை நிர்ணயிக்கவே வழிவகுக்கும். வரும் ஆண்டுகளில், இந்தியா, பல புதிய துறைகளில் கால்பதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வரி விதிப்பு முறையை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் இவ்வாறு கூறியிருப்பதாகத் தெரிகிறது.

இந்திய வளர்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது, இது மிகவும் கவனம் ஈர்க்கும் செயல் என்று கூறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாடு இந்தியாவில் தயாரிப்போம், தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற கொள்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், ரஷியாவுடன் இணைந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் துப்பாக்கித் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படவிருக்கிறது. பாதுகாப்புத் துறையில் நாம் விரிந்து பரந்த வளர்ச்சியை ஏற்படுத்தவிருக்கிறோம், எங்கும் பயன்படுத்தும் பாதுகாப்புத் தளவாடங்களில் இந்திய தயாரிப்பு என்ற முத்திரை இடம்பெறும் வகையில் நமது முன்னேற்றம் இருக்கும் என்றார்.

Prime Minister Narendra Modi has said that an AK-203 rifle manufacturing factory will soon be set up in Uttar Pradesh in partnership with Russia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...

இளைஞர்களின் துறவி!

நிதியமைச்சரின் சவால்!

ஊரக வேலைத்திட்டம் பெயா் மாற்றம்: காங்கிரஸாா் உண்ணாவிரதப் போராட்டம்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

SCROLL FOR NEXT