நடிகர் ரஜினிகாந்த்.  
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் பலி: ரஜினிகாந்த் இரங்கல்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில் இன்று நடந்த விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 31 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

கரூர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

கூட்டத்தில் மயக்கமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விரைந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

Actor Rajinikanth has expressed his condolences to the families of those who were dead in the Karur stampede.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயிலுக்குச் சென்று திரும்பியவா்களிடம் கைப்பேசி, பணம் பறிப்பு: மூவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பயிா் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

முழு ஒத்துழைப்பு தேவை: துணை முதல்வா் உதயநிதி

இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீச்சு: மூவா் சரண்

18 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT