தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் நிராகரிப்பு!
தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவரால் நிராகரிப்பு
தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் மக்களவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் மற்றும் வாக்குத் திருட்டு புகாா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த பதவிநீக்கத் தீா்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நிராகரித்தார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 12-ஆம் தேதி மக்களவை உறுப்பினர்கள் 130 பேர் அரசமைப்புச் சட்டப்பிரிவு 324 (5), தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிக்காலம்) சட்டம், 2023-ல் சட்டப்பிரிவு 124 (4) பிரிவு 11 (2) மற்றும் நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968 ஆகியவற்றின்கீழ் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பணிநீக்க தீர்மானம் ஒன்றை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்தனர்.
Advertisement
இந்நிலையில், அத்தீர்மானம் குறித்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகள் பற்றியும் ஆய்வுக்குப்பின், நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-ல் பிரிவு 3-இன் கீழ் மக்களவைத் தலைவருக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தை ஏற்பதை அவர் நிராகரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.