முகப்பு
இந்தியா

புதுவை, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு நிறைவு!

புதுவை, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு நிறைவடைந்தது தொடர்பாக...

Updated On : 9 ஏப்ரல் 2026, 6:20 pm IST
வாக்குப் பதிவு - படம்: X/தேர்தல் ஆணையம்
பகிர்:

கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு, இன்று(ஏப். 9) காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மாலை 5 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் 72.40 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளத்தில் 72.071 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 84.42 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன

Advertisement

Advertisement

கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று(ஏப். 9) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப். 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23, 29-ஆம் தேதியும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

கேரளம், அஸ்ஸாம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

summary

Voting for the Legislative Assembly elections in the states of Kerala and Assam, as well as in the Union Territory of Puducherry, began at 7:00 AM today and concluded at 6:00 PM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.