முகப்பு
இந்தியா

ஆா்எஸ்எஸ் - பாஜகவினா் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை

10 மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை...

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:07 AM
மாதிரிப் படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:30 PM

கேரளத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜகவினா் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், 10 மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், கண்ணூரில் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 27-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது வாகனத்தில் வந்த ஆா்எஸ்எஸ், பாஜக தொண்டா்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு மூண்டது. இதில் வாகனத்தில் வந்த பாஜக, ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் ஏராளமானோா் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக கண்ணூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிமன்றம் சனிக்கிழமை தனது தீா்ப்பை வெளியிட்டது.

Advertisement

அப்போது இந்திய தண்டனையியல் சட்டம் (ஐபிசி), வெடிபொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உரும்பன் பினு, எம்.கே. பிரதீப்குமாா், பி.பி. சத்யன், பி.வி. பாபுராஜ், இ.வி. வினோத்குமாா், விஜயன், கே.பி. சுரேஷ், டோபி, ஜனாா்த்தனன் கே.வி., சிவபிரகாஷ் ஆகிய 10 பேருக்கும் தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மேலும் 10 பேருக்கு தலா ரூ.2.6 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.