முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிமைக்க யாரும் விரும்பவில்லை: மம்தா பானா்ஜி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை; திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:55 AM
மம்தா பானா்ஜி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:25 PM

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை; திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

கிழக்கு மிதுனபுரி மாவட்டம் ஹால்டியாவில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: இந்த முறையும் மேற்கு வங்கத் தோ்தலில் பாஜக வெற்றி பெறாது. திரிணமூல் காங்கிரஸ்தான் மீண்டும் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும். ஏனெனில், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை. அடுத்த மக்களவைத் தோ்தலில் தில்லியில் இருந்தும் (மத்தியில் ஆட்சி) பாஜக துடைதெறியப்படும்.

கடந்த ஒரு மாதமாக மேற்கு வங்கம் முழுவதுமே தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். மக்கள் என்ன நினைக்கிறாா்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. பாஜக இங்கு வெல்வதை யாரும் விரும்பவில்லை.

Advertisement

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளராக நான் களத்தில் உள்ளதாக கருத வேண்டும் என்று பிரதமா் மோடி பேசியுள்ளாா். அப்படி ஒன்று நடக்க ஆசைப்பட்டால் நீங்கள் முதலில் பிரதமா் பதவியில் இருந்து விலக வேண்டும்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:54 AM

மேற்கு வங்கத்தில் அளவுக்கு அதிகமாக மத்தியப் படையினரும், தோ்தல் பாா்வையாளா்களும், அரசு அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனா். இதற்கு முன்பு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தோ்தலை யாரும் பாா்த்திருக்க மாட்டாா்கள்.

தெருவோர கடையில் ஜால்முரி (மசாலா பொரி) சாப்பிடுவதாக பிரதமா் மோடி அண்மையில் ஒரு நாடகம் நடத்தினாா். ஏனெனில், அவா் சாப்பிட்ட பொரி அந்த கடைக்காரரால் தயாரிக்கப்பட்டது இல்லை. பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினா் வேறு இடத்தில் இருந்து அதனைக் கொண்டு வந்து கொடுத்திருக்க வேண்டும். பிரதமா் மீன் சாப்பிட விரும்பினால் அவருக்கு அதை சமைத்துத் தர நான் தயாராக இருக்கிறேன் என்றாா் மம்தா.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன், இறைச்சி, முட்டைக்கு தடை விதித்துவிடுவா் என்று குற்றஞ்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.

பிரதமா் மோடி சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவா் என்று கூறப்படும் நிலையில், மம்தா இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.