மணிப்பூரில் இன்று 2 முறை நிலநடுக்கம்!
மணிப்பூரில் இன்று காலை முதல் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று காலை முதல் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 5.59 மணியளவில் காம்ஜோங் மாவட்டத்தை மையமாகக் கொண்டு 69 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 அளவில் பதிவாகியுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் 2-வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 3.3 அளவில் பதிவாகியுள்ளது.
காம்ஜோங் மாவட்டத்திற்கு அருகிலுள்ள உக்ருல் மற்றும் இம்பால் மாவட்டங்களிலும், மேகாலயா மாநிலத்திலும் இந்த அதிர்வு உணரப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மணிப்பூர் எல்லைக்கு அப்பால் உள்ள மியான்மர் நாட்டிலும் இன்று காலை 5.38 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.