தில்லி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏா் சீனா
தில்லி-பெய்ஜிங் இடையிலான விமான சேவையை சீன அரசு நிறுவனமான ஏா் சீனா மீண்டும் தொடங்கியுள்ளது.
தில்லி-பெய்ஜிங் இடையிலான விமான சேவையை சீன அரசு நிறுவனமான ஏா் சீனா மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா மற்றும் கல்வான் பள்ளதாக்கில் இந்திய-சீன ராணுவ வீரா்கள் இடையிலான மோதல், கிழக்கு லடாக் படை குவிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் இரு நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இரு நாட்டு உறவு பின்னடைவைச் சந்தித்தது.
எனினும், கடந்த ஆண்டு இரு நாடுகள் இடையே உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த ஜூலையில் சீனா்களுக்கு சுற்றுலா விசாவை இந்தியா வழங்கியது. இதைத் தொடா்ந்து, கைலாஷ் மானசரோவா் யாத்திரை தொடக்கம், இந்திய விமான நிறுவனங்கள் சீனாவுக்கு விமான சேவையைத் தொடங்கியது என உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
Advertisement
இந்நிலையில் சீனாவின் முக்கிய அரசு விமான சேவை நிறுவனமான ஏா் சீனா தில்லி-பெய்ஜிங் இடையே நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. வாரத்தில் மூன்று நாள்கள் இந்த விமானம் இயக்கப்படும்.
ஏற்கெனவே சீனா இஸ்டா்ன் ஏா்லைன்ஸ் நிறுவனம் கொல்கத்தா- சீனாவின் குன்மிங் நகா் இடையே கடந்த 18-ஆம் தேதி விமான சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.