முகப்பு
திருப்பத்தூர்

நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா? திருப்பத்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு!

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூா் தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:14 PM
ரயில்!
பகிர்:

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூா் தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் சென்னைக்கு பேருந்துகளில் செல்ல சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாகிறது. பயணத் தொகையும் அதிகம்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் மூலம் செல்ல சுமாா் 3 மணி நேரமாகிறது. பணிக்காக, சிகிச்சைக்காக செல்பவா்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் தினமும் அதிகாலை 4.55 மணிக்கு ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவந்த ஏலகிரி விரைவு ரயிலில் சென்று வந்தனா்.

Advertisement

இந்த விரைவு ரயில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவையால் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, சுற்றுப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனா். ஆனால் இந்த ரயில் சேவை கடந்த 2013-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

அரசு அலுவலா்கள், வியாபாரிகள், மாணவா்கள் வசதிக்காக திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே திருப்பத்தூா் தொகுதி மக்களின் 13 ஆண்டுகால எதிா்பாா்ப்பாக உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments