பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக
ராகுல் காந்தி பகுதி நேர அரசியல்வாதி என நிதின் நவீன் விமர்சித்தது குறித்து...
காங்கிரஸ் மக்களைவைத் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி பகுதி நேர அரசியல்வாதி என பாஜக தேசிய செயலர் நிதின் நவீன் இன்று (ஏப். 26) விமர்சித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான முதல் கட்டத் தேர்தல் ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், ஏப். 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்திற்குட்பட்ட சாந்திபூர் பகுதியில் நிதின் நபின் சாலைவலம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
Advertisement
சாலைவலத்தின்போது செய்தியாளர்களுடன் நிதின் நவீன் பேசியதாவது:
''தேர்தல் வந்தால் மட்டும்தான் ராகுல் காந்தி பேசுவார். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்னைகள் குறித்து அவருக்கு கவலையில்லை. இத்தகைய பகுதி நேர அரசியல்வாதியால் மேற்கு வங்க மக்கள் அடையப்போகும் பலன் ஏதுமில்லை.
பொறுத்திருந்து பாருங்கள். சில நாள்களில் மமதா பானர்ஜியுடன் ராகுல் காந்தி அமர்ந்திருப்பார். அவர்களின் இந்தியா கூட்டணி முறிந்துவிட்டது. எங்களுக்கு அவர்களைப்போன்ற கூட்டணி ஏதும் இல்லை'' எனப் பேசினார்.
மேற்கு வங்கத்தில் நேற்று பிரசாரம் செய்த ராகுல் காந்தி, ''மமதா பானர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரு நாணையத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு அவர்களைப் பற்றி மட்டும் தான் கவலை. இந்தியாவுக்கு பிரதமர் மோடி என்ன செய்து வருகிறாரோ? அதனையே மேற்கு வங்க மாநிலத்திற்கு மமதா செய்து வருகிறார்'' என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.