முகப்பு
இந்தியா

ஏழைகளுக்கான பட்ஜெட்: பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 2:26 PM
பிரதமர் மோடி
பகிர்:

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் ஜலந்தரில் குரு ரவிதாஸி ஜெயந்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதாய் இருக்கும்.

பஞ்சாபில் பிரதமர் மோடி

இது கிராமங்களை வலுப்படுத்தும் பட்ஜெட். இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். தன்னம்பிக்கை இந்தியா மற்றும் சுதேசி இந்தியாவை (Make in India - மேக் இன் இந்தியா) ஊக்குவிக்கும் பட்ஜெட் என்று தெரிவித்தார்.

முன்னதாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தி, மூலதனத்தை இழந்துவரும் முதலீட்டாளர்கள், சரிந்து வரும் வீட்டு சேமிப்பு, விவசாயிகளின் நிலைமை, உலகளாவிய அதிர்ச்சி நிலைமை ஆகிய அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Union Budget will increase income of farmers, strengthen villages: PM Modi

முழு கட்டுரையைப் படிக்க →