புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையிலிருந்து பெங்களூருக்கு 1.13 மணி நேரத்தில் செல்ல முடியும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்
இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது:
”தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக 2009-14 காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரி ஒதுக்கீடு ரூ. 879 கோடியாக இருந்த நிலையில், 2026-27 நிதியாண்டில் 9 மடங்கு உயர்ந்து ரூ. 7,611 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு 2 புல்லட் ரயில்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் ரயில்வே துறைக்கு ரூ. 7,611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இரண்டு புதிய புல்லட் ரயில் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன
புல்லட் ரயிலின் மூலம் சுமார் 1 மணி நேரம் 13 நிமிடங்களில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்ல முடியும்; சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு 2 மணி நேரம் 55 நிமிடங்களில் செல்ல முடியும்” என்றார்
நாட்டின் அதிவேக ரயில் இணைப்புக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டம், 508 கி.மீ. தொலைவுடையது.
இது குஜராத் மற்றும் தாத்ரா-நகா் ஹவேலியில் 352 கி.மீ., மகாராஷ்டிரத்தில் 156 கி.மீ. தொலைவுக்கு அதிநவீன பொறியியல் நுட்பங்களுடன் உலகத் தரத்தில் கட்டமைக்கப்படுகிறது. இதில் 465 கி.மீ. அதாவது 85 சதவீதம் பாலங்களைக் கொண்டதாகும்.
இந்த புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும்போது, மும்பை-அகமதாபாத் பயண நேரம் 2 மணி நேரம் 17 நிமிடங்களாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.