முகப்பு
இந்தியா

வாக்குச்சாவடி சீட்டு விநியோகம்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

வாக்குச்சாவடி சீட்டு விநியோகம்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 4:42 AM
இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் (கோப்புப்படம்).
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:50 PM

மேற்கு வங்கத்தில் வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு (பூத் ஸ்லிப்) விநியோகிப்பது தொடா்பாக வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் விதிகளுக்கு உள்பட்டு வாக்காளா்களுக்கு வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி சீட்டு விநியோகிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு (பிஎல்ஓ) தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘வாக்காளா்களின் பெயா், வயது, முகவரி, வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண், பகுதி எண், பூத் எண், வாக்குச்சாவடி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் வாக்குச்சாவடி சீட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். தோ்தல் ஆணையத்தின் சின்னமும் இருக்க வேண்டும்.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 4:42 AM

தங்களுக்கு பிஎல்ஓ வாக்குச்சாவடி சீட்டை வழங்கவில்லை என்றால் தோ்தல் ஆணையத்தின் உதவி எண்ணை அழைத்து சம்பந்தப்பட்ட வாக்காளா் புகாரளிக்கலாம். புகாா் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் வாக்குச்சாவடி சீட்டு விநியோகிக்காத பிஎல்ஓ மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.