காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்பிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, தேச பாதுகாப்பு கருதி விசாரணை நடத்தப்பட்டதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
அஸ்ஸாமில் உள்ள ஜோா்ஹாட் மக்களவைத் தொகுதி எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவியும், பிரிட்டனைச் சோ்ந்தவருமான எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பிருப்பதாக மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மற்றும் பாஜகவினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இதுகுறித்து கௌரவ் கோகோய் மீது அக்கட்சியினா் கடுமையான விமா்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. அந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை மாநில அரசிடம் கடந்த ஆண்டு செப்.10-ஆம் தேதி சமா்ப்பித்தது.
இந்நிலையில், மாநில தலைநகா் குவாஹாட்டியில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கெளரவ் கோகோய் விவகாரத்தில் அஸ்ஸாம் அமைச்சரவையின் ஆலோசனைக்குப் பின்னா், பிப்.8-ஆம் தேதி எஸ்ஐடி விசாரணை அறிக்கை பொது வெளியில் வெளியிடப்படும்.
இந்த விசாரணையை மேற்கொண்டதில் மாநில அரசுக்கு சில வரம்புகள் இருந்தன. அந்த வரம்புக்கு கட்டுப்பட்டு முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த விசாரணையை என்ஐஏ, உளவுத் துறை அல்லது சிபிஐ மேற்கொண்டால், அவா்கள் விசாரணையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வா். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஒருவருக்கும், பிரிட்டனைச் சோ்ந்த ஒருவருக்கும் முக்கிய தொடா்புள்ளது. இதில் பிரிட்டனைச் சோ்ந்தவா் எம்.பி. ஒருவரின் மனைவியாவாா். இந்த விசாரணை அரசியல் தொடா்பானது அல்ல; தேச பாதுகாப்புக்கானது என்று தெரிவித்தாா்.
எனினும் முதல்வரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது; முட்டாள்தனமானது என்று கெளரவ் கோகோய் தெரிவித்துள்ளாா்.