இந்தியா

கனடா: வணிக வளாகத்தில் இந்தியா் சுட்டுக் கொலை

கனடா நாட்டின் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் இந்தியா் ஒருவா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

கனடா நாட்டின் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் இந்தியா் ஒருவா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

கா்நாடகத்தைச் சோ்ந்த 37 வயதான சந்தன் குமாா் ராஜா நந்தகுமாா், கனடாவின் பிராம்டனில் வசித்து வருகிறாா். ஐ.டி. ஊழியரான அவா், சனிக்கிழமை மதியம் 3.31 மணியளவில் பிரபல ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்தாா். அப்போது காரில் வந்த மா்ம நபா்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினா் சம்பவ இடம் சென்றபோது, நந்தகுமாா் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் காவல்துறையினா் சோ்த்தனா்.

ஆனால் அங்கு நந்தகுமாா் பரிதாபமாக இறந்து விட்டாா். என்ன காரணத்திற்காக அவரை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா், துப்பாக்கிச் சூடு நடத்தியது யாா் என்பது தெரியவில்லை. ஆனால் அவரை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கனடா காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

மணிப்பூா்: நாகா சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைப்பு! அமைதி காக்க முதல்வா் வேண்டுகோள்

யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி! இபிஎஃப்ஓ புதிய செயலி ஏப்ரலில் அறிமுகம்

பிப். 16,17 -இல் சென்னையில் இந்திய நூலக மாநாடு!

ஃபெடரேஷன் கோப்பை வாலிபால்: இந்திய பல்கலை. அணிக்கு வெண்கலம்

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் ஒப்புதல்

SCROLL FOR NEXT