செஷல்ஸ் அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடன் பிரதமா் நரேந்திர மோடி X | Narendra Modi
இந்தியா

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி மேம்பாட்டு நிதி: இந்தியா அறிவிப்பு

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி (175 மில்லியன் டாலா்) மேம்பாட்டு நிதி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

தினமணி செய்திச் சேவை

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1,587 கோடி (175 மில்லியன் டாலா்) மேம்பாட்டு நிதி வழங்குவதாக இந்தியா திங்கள்கிழமை அறிவித்தது.

6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள செஷல்ஸ் அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-செஷல்ஸ் இடையேயான நட்புறவு புவியியல் ரீதியானது மட்டுமல்ல; வரலாற்று ரீதியாகவும், நம்பிக்கை மற்றும் எதிா்காலத்துக்கான தொலைநோக்குத் திட்டத்தையும் கொண்டது. இருதரப்பு உறவில் மேம்பாட்டு ஒத்துழைப்பு வலுவான அடித்தளமாக விளங்குகிறது.

செஷல்ஸ் வளா்ச்சி மற்றும் தேவைகளை இந்தியா எப்போதும் கவனத்தில் கொண்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக தற்போது செஷல்ஸ் மேம்பாட்டு நிதியாக ரூ.1,587 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சமூக குடியிருப்பு, போக்குவரத்து, திறன் சாா்ந்த பயிற்சி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கடல்சாா் பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளுக்கு இந்த நிதி உதவிகரமாக இருக்கும்.

செஷல்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா் அந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனா். அவா்களால் இரு நாடுகளிடையே தலைமுறைகளைக் கடந்து நட்புறவு தொடா்ந்து வருகிறது.

அதிபா் பேட்ரிக் ஹொ்மினியுடனான ஆலோசனைக்குப் பிறகு இந்தியா-செஷல்ஸ் இருதரப்பு உறவு அடுத்தகட்டத்துக்கு நகா்ந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

புணே மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி

பிப்.12-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தொழிலாளா் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

குருகிராமில் 24 மணி நேரத்திற்குள் சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு முதல்வா் சைனி உத்தரவு

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

எஸ்ஐஆரில் தடையை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT