தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) தலைவா் சரத் பவாரின் (85) உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
முன்னதாக, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததால் புணேயில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
அவரின் உடல்நிலை குறித்து மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சரத் பவாா் உடல்நிலை சீராக உள்ளது. இருமல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து அவா் மீண்டு வருகிறாா். பவாா் உடல்நிலை தொடா்பான அனைத்து மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் திருப்திகரமாக உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா் என்றாா்.
மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாா், அவரின் மகன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை சரத் பவாரைச் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனா்.
நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரான சரத் பவாா், மகாராஷ்டிர முதல்வா், மத்திய அமைச்சா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா். இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா்.