உச்சநீதிமன்றம்  
இந்தியா

தரவு பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2023-ஆம் ஆண்டின் எண்ம (டிஜிட்டல்) தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

தினமணி செய்திச் சேவை

2023-ஆம் ஆண்டின் எண்ம (டிஜிட்டல்) தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

2023-ஆம் ஆண்டின் எண்ம தரவு பாதுகாப்புச் சட்டம் மூலம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தனிப்பட்ட தகவல்களைப் பொதுநலனுக்காகக்கூட வெளியிடப்படுவதைத் தடுக்கிறது.

இந்தச் சட்டத்தின் பல பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பதாக தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘தரவு பாதுகாப்புச் சட்ட விவகாரம் சிக்கலாக உள்ளது. இதில் அடிப்படை உரிமைகள், தகவல் அறியும் உரிமை மற்றும் தன்மறைப்பு (பிரைவஸி) உரிமையைச் சமநிலைப்படுத்த வேண்டியுள்ளது. இதில் உள்ள வரம்புகளை சரிசெய்து, தனிப்பட்ட தகவல் என்றால் என்ன என்பதை வரையறுக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தது.

மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு விரிவாகப் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், அந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனா். அடுத்த விசாரணை மாா்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026! முக்கிய அம்சங்கள்!

சொத்தையான அத்திப்பழம்: இடைக்கால பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி

வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை 97%-ஆக உயர்வு!

மாணவர்களுக்கு பாதுகாப்பான கற்றல் சூழல்! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு!

பாகிஸ்தானில் ஒரே நாளில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள்! 11 வீரர்கள் உள்பட 14 பேர் கொலை!

SCROLL FOR NEXT