முகப்பு
இந்தியா

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

கொல்கத்தாவில் ரயில் நிலையத்தின் நடைமேடையில் உள்ள கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Updated On : 12 ஜனவரி, 2026 at 6:33 AM
கோப்புப்படம்.
பகிர்:

கொல்கத்தாவில் ரயில் நிலையத்தின் நடைமேடையில் உள்ள கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம், தெற்கு கொல்கத்தாவில் உள்ள பகஜதின் ரயில் நிலைய நடைமேடையில் அமைந்திருந்த கடையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தாகவும், தீ வேகமாக பரவி, அந்த பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது.

மூன்று தீயணைப்பு வாகனங்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து காரணமாக கிழக்கு ரயில்வேயின் சீல்டா தெற்கு பிரிவில் ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.

டவுன் லைன் வழியாக ரயில்களின் இயக்கம் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

summary

Local train services were affected after a stall on the platform of Baghajatin station in south Kolkata caught fire on Monday morning, officials said.

முழு கட்டுரையைப் படிக்க →