திருமணமான சில வாரங்களில் பெண் சடலமாக மீட்பு: காரணம்?
இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக..
உத்தரப் பிரதேசம், குஷிநகர், துதாஹி நகரில் 20 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லால் பகதூர் சாஸ்திரி நகரின் 9-வது வார்டில் தனது கணவரின் வீட்டில் வசித்து வருபவர் நேஹா ஜெய்ஸ்வால். இவருக்கு திருமணமாகி 56 நாள்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், வரதட்சணை கேட்டு அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Advertisement
Advertisement
காவல்துறையின் படி, பிப்ரா ஜந்தாம்பூரைச் சேர்ந்த கணேஷ் ஜெய்ஸ்வாலின் மகள் நேஹா ஜெய்ஸ்வால், கடந்தாண்டு நவம்பர் 22 அன்று விவேக் ஜெய்ஸ்வால் (24) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நேஹா குடும்பத்தினருக்கு காலை உணவு தயாரித்துவிட்டு தனது அறைக்குச் சென்ற நேஹா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், ஜன்னலை திறந்துபார்கையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, குடும்பத்தினர் காவல்துறைக்கும் நேஹாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
நேஹாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக விஷ்ணுபுரா காவல் நிலைய ஆய்வாளர் வினய் மிஸ்ரா தெரிவித்தார்.
A 20-year-old woman was found hanging from a ceiling fan at her husband's house in Dudahi town here, police said on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.