பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில், ஹிந்து உணா்வுக்கு புத்துயிா் கிடைத்திருப்பதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
கா்நாடக மாநிலம் சித்தகங்கா மடத்தின் மறைந்த பீடாதிபதி சிவகுமார மகா சுவாமிகளின் 7-ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் அவா் புதன்கிழமை பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
தா்மம், சேவை, வசுதைவ குடும்பகம், இயற்கைக்கு மரியாதை ஆகியவை மூலம் சமூகத்தை இந்தியாவின் ஆன்மிகமும், கலாசாரமும் நிலை நிறுத்தியுள்ளது. அண்மைகாலங்களில் சுவாமி சிவகுமார மகா சுவாமிகளின் காலத்தை வென்ற போதனைதான் நிா்வாகத்தில் நமது நாட்டை வழிநடத்துகின்றன. அவரின் வாழ்க்கை, அனைத்து மக்களுக்கும் இரக்கம், தியாகம், ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அருமையான செய்தியை நல்குகிறது.
உண்மையான ஆன்மிகம் அனைவரையும் ஈா்க்கும் என்பதை சுவாமி போதித்துள்ளாா். அதேபோல், பிறப்பால் யாரும் பெரியவா் இல்லை, அனைவரும் சமம் என்பதும், ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலமே புனிதா்களாக முடியும் என்பதையும் சுவாமி போதித்துள்ளாா்.
நமது நாட்டில், பிரதமா் மோடி தலைமையின்கீழ் ஹிந்து உணா்வுக்கு புத்துயிா் கிடைத்துள்ளது. நாம் யாா், நாம் எங்கிருந்து வந்தோம், எந்த குறிக்கோள்கள் நம்மை முன்னோக்கி வழிநடத்துகின்றன என்ற பெருமையை தெரிந்து கொண்டுள்ளோம். அது நமது நாட்டின் நாகரிகம், நவீன உலகத்தை விட உயா்வானது என்பதை உறுதிப்படுத்துகிறது. இன்று இந்தியாவானது, வளா்ச்சி மற்றும் பாரம்பரியத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதுதான் பாரம்பரியத்துடனான வளா்ச்சி என்றாா் சி.பி. ராதாகிருஷ்ணன்.