FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.: 3 திருநங்கை சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று

உத்தரப் பிரதேசத்தில் 3 திருநங்கை கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 23 ஜனவரி 2026, 6:23 pm IST
தண்டனைக் கைதி
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் 3 திருநங்கை கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 13 திருநங்கை கைதிகளில் மூன்று பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ரிஷப் திவேதி கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தாக்குதல் வழக்கு தொடர்பாக மொத்தம் 13 திருநங்கைகள் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Advertisement

Advertisement

அதில் ஏழு பேரின் ஆரம்ப மருத்துவச் சோதனை அறிக்கையில் அவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்தது.

பிறகு இரண்டாவது முறையாக அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் மூன்று பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மூன்று திருநங்கை கைதிகளும் தற்போது தனியாக அடைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

24 பெண்கள் உட்பட மொத்தம் 881 கைதிகள் பிரதாப்கர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 கைதிகள் திருநங்கைகள்.

summary

Three of the thirteen transgender inmates lodged in the Pratapgarh district jail have tested HIV-positive in a second screening test, a jail official said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments