ஹைதராபாத்தில் 4 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 6 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
ஹைதராபாத்தில் 4 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் வரை உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹைதராபாத்தில் 4 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் வரை உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள 4 மாடி கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு, போலீஸார் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவலின்படி, ஆட்டோ ஓட்டுநர், காவலாளி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கட்டடத்தை சுற்றிலும் அடர்ந்த புகை சூழ்ந்ததால் மீட்புப் பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே மீட்புப் பணியை மேற்பார்வையிட ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனரும் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
Six persons are feared to be trapped inside a four-story building here after a major fire broke out Saturday afternoon, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.