ராகுல் காந்தி  
இந்தியா

உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக அரசமைப்புச் சட்டம்: ராகுல் காந்தி

நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக அரசமைப்புச் சட்டம் உள்ளது ....

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக அரசமைப்புச் சட்டம் உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

77-ஆவது குடியரசு தினத்தையொட்டி, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு இந்தியரின் மிகப் பெரிய ஆயுதமாக நமது அரசமைப்புச் சட்டம் உள்ளது. அந்தச் சட்டம் நமது குரலாக, நமது உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக உள்ளது.

இந்த வலுவான அடித்தளத்தின் மீதுதான் நமது குடியரசு நிற்கிறது. சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தால் மட்டுமே இந்த அடித்தளம் வலுவாகும்.

நமது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது இந்திய குடியரசைப் பாதுகாப்பதாகும். அதுவே நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அளிக்கப்படும் உண்மையான மரியாதையாகும்’ என்று தெரிவித்தாா்.

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT