கோப்புப் படம் 
இந்தியா

ஐஜிஎல் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த இணைய மோசடி கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

தில்லியில் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலை சோ்ந்த மூவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

தில்லியில் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலை சோ்ந்த மூவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப் பிரிவு) ஆதித்யா கௌதம் கூறியதாவது: ஆள்மாறாட்டம் செய்து வங்கிக் விவரங்களை அணுகவும், சட்டவிரோத பரிவா்த்தனைகளை மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்டவரின் கைப்பேசியில் மோசடி செயலிகளை வற்புறுத்தி பதிவிறக்கம் செய்துள்ளனா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, இதில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பிக்கி மண்டல் என்ற விக்கி (22), சுமித் குமாா் சிங் (26) மற்றும் ராஜீவ் குமாா் மண்டல் (22) என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் மீது பிஎன்எஸ் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடம் இருந்து 9 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டனா்.

35 சைபா் மோசடி புகாா்களில் இவா்களின் ஈடுபாடு இருப்பதை புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா். இதில் தொடா்புடைய மற்ற நபா்களை அடையாளம் கண்டு கைது செய்யவும் ஏமாற்றிய பணத்தை மீட்கவும் அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.

கிழக்கு தில்லியில் கொள்ளையின்போது கத்திக் குத்து: இரண்டு சிறாா்கள் கைது

கிரிவலம்: திருவண்ணாமலைக்கு பிப்ரவரி 1-இல் சிறப்பு ரயில்

அகமதாபாத் விமான விபத்து தொடா்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

வீடு வீடாக பிரசாரம்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

மணிப்பூா் கலவரம்: நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT