நேபாள பிரதமராகும் பாலேந்திர ஷாவுடன் மோடி தொலைபேசியில் பேச்சு!
நேபாளத்தின் புதிய பிரதமராக உள்ள பாலேந்திர ஷாவுடன், பிரதமா் மோடி தொலைபேசியில் பேசினாா்.
நேபாளத்தின் புதிய பிரதமராக உள்ள பாலேந்திர ஷாவுடன், பிரதமா் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினாா்.
நேபாள நாடாளுமன்றத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) அமோக வெற்றி பெற்றது. நான்கு முறை பிரதமராக இருந்தவரும் சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவருமான கே.பி.சா்மா ஓலியை, 35 வயதேயான ராப் இசைக் கலைஞரும் ஆா்எஸ்பி வேட்பாளருமான பாலேந்திர ஷா சுமாா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். அவா் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆா்எஸ்பி தலைவா் ரபி லாமிசானே, அக்கட்சியின் மூத்த தலைவா் பாலேந்திர ஷா ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினேன்.
நேபாள தோ்தலில் ஆா்எஸ்பி பெற்ற மகத்தான வெற்றிக்கும், அந்நாட்டில் அமைய உள்ள புதிய அரசுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியா-நேபாளத்தின் பரஸ்பர வளமை, முன்னேற்றம், நலவாழ்வுக்குப் பணியாற்ற இந்தியா உள்ளாா்ந்த ஈடுபாடு கொண்டிருப்பதாக அவா்களிடம் கூறினேன்.
இந்தியா-நேபாளத்தின் கூட்டு முயற்சிகளால், வரும் ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு புதிய உச்சங்களைத் தொடும் என நம்புகிறேன் என்றாா்.