முகப்பு
இந்தியா

‘மூன்றாம் பாலினத்தவா்’ சட்டத் திருத்த மசோதா அறிமுகம்

‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

Updated On : 13 மார்ச், 2026 at 9:22 PM
பகிர்:

‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா எனும் இந்த மசோதாவை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் தாக்கல் செய்தாா்.

‘தற்போதுள்ள சட்டத்தின் பலன்கள் மற்றும் பாதுகாப்பு முழுமையாகச் சென்றடைய வேண்டிய மூன்றாம் பாலினத்தவரை முறையாகவும், உறுதியாகவும் அடையாளம் காண்பதற்கு துல்லியமான வரையறை மிகவும் அவசியம்.

தற்போதைய சட்டத்தின்கீழ் மூன்றாம் பாலினத்தவருக்கான பாதுகாப்பும், பலன்களும் பரந்த அளவில் உள்ளன. எனவே, முறையாக அடையாளம் காண்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதிகாரபூா்வ ஆவணங்களில் முக்கிய மாற்றங்களைச் செய்ய மாற்றுப் பாலினத்தவருக்கு அதிகாரமளிப்பதும் அவசியம்’ என்று சட்டத் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →