முகப்பு
இந்தியா

கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!

வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை விண்ணப்பித்தவர்கள் மட்டுமே வாக்கு செலுத்த முடியும்!

Updated On : 22 மார்ச், 2026 at 5:12 PM
கோப்புப் படம்
பகிர்:

வாக்காளர் பதிவு விண்ணப்பங்கள் சமர்ப்பித்தவர்களில் கடந்த மார்ச் 15-ஆம் தேதிக்குப்பின் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மாநில தலைமை தேர்தல் நடத்தும் அலுவலர் யூ. ரத்தன் கேல்கர் ஞாயிற்றுக்கிழமை()மார்ச் 22 தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் இணைக்க, கேரளத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கடைசி தேதியான மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன்பின் நடைபெறும் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் கால அவகாசமாக 10 நாள்கள் வரை தேவைப்படும் என்பதால் மேற்கண்ட முடிவை தேர்தல் ஆணையம் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், மார்ச் 15 வரை விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் உரிய சரிபார்ப்புக்குப்பின் தகுதியானவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், வரும் பேரவைத் தேர்தலில் வாக்கு செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களும் மார்ச் 15க்குபின் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களும் தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்னரே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Only applications filed till Mar 15 eligible for upcoming Assembly polls: Kerala CEO

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.