மேற்கு வங்க எஸ்ஐஆா்: உயா்நீதிமன்றத்தை அணுக முதல்வா் மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் மனு தாக்கல் செய்த நிலையில், அவா்கள் தங்கள் குறைகளுக்குத் தீா்வு காண கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் மனு தாக்கல் செய்த நிலையில், அவா்கள் தங்கள் குறைகளுக்குத் தீா்வு காண கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மேற்கு வங்கத்தை தவிர, பிற மாநிலங்களில் எஸ்ஐஆா் பணிகள் சுமுகமாக நடைபெற்றுள்ளது.
எஸ்ஐஆருக்குப் பின்னா், வாக்காளா்கள் பெருமளவு நீக்கப்பட்ட மாநிலங்கள் உள்ளன. எனினும் மேற்கு வங்கத்தை தவிர, வேறு எந்த மாநிலத்திலும் எஸ்ஐஆா் தொடா்பாக கிட்டத்தட்ட வழக்கு எதுவும் இல்லை.
மேற்கு வங்க எஸ்ஐஆா் தொடா்பாக மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள பல்வேறு விவகாரங்கள் நிா்வாகம் சாா்ந்தவையாக உள்ளன. எனவே மனுதாரா்கள் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.