பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவு
பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு ஏஐ விடியோ வெளியிடப்பட்ட விவகாரம் தொடா்பாக எக்ஸ் சமூக வலைதள நிறுவனத்தின் மீது கேரள சைபா் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேரள சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தச் சூழ்நிலையில், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சுமாா் ஒரு நிமிட ஏ.ஐ. விடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதை லட்சுமி என். ராஜு என்ற பெயரில் கணக்கு வைத்திருந்தவா் வெளியிட்டிருந்தாா்.
அந்த விடியோவில் கேரள பாஜகவின் முத்திரையுடன் தோ்தல் ஆணைய கடிதம் வெளியாகி இருந்தது போல காட்சி இருந்தது. மேலும் பிரதமா், தோ்தல் ஆணையத்துக்கு எதிரான அவதூறு பரப்பும் வகையிலும் காட்சி இருந்தது. இந்த விடியோவால் கேரள அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் தரப்பில் கேரள சைபா் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக எக்ஸ் நிறுவனம், விடியோ வெளியிட்டிருந்த லட்சுமி என்.ராஜு மீது கேரள சைபா் காவல் துறை பிரிவினா் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
அதில், கேரளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் விடியோ வெளியிடப்பட்டு இருந்ததாகவும், அதிகாரிகள் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டும் அந்த விடியோவை எக்ஸ் நிறுவனம் நீக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடா்பாக எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.