அடுத்த நிதியாண்டில் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்
அடுத்த நிதியாண்டின் (2026-27) ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அடுத்த நிதியாண்டின் (2026-27) ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
2026-27 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட அரசு ரூ.17.20 லட்சம் கோடி கடன் பெற வேண்டி இருக்கும் என கடந்த பிப்.1-ஆம் தேதி பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இதில் ரூ.11.7 லட்சம் கோடி நீண்ட கால கடன் பத்திரங்கள் மூலம் பெறப்படும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.
இந்நிலையில், மத்திய அரசு மேற்கொண்ட கடன் மேலாண்மை நடவடிக்கைகளைத் தொடா்ந்து 2026-27 நிதியாண்டில் பெற வேண்டிய கடன் தொகை ரூ.16.09 லட்சம் கோடியாக குறைந்தது.
இதுதொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2026-27 நிதியாண்டில் மத்திய அரசு ரூ.16.09 லட்சம் கோடி கடன் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் பசுமைத் திட்ட கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.15,000 கோடி உள்பட நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8.20 லட்சம் கோடி (51 சதவீதம்) ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் திரட்டப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
2026-27 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும் என பட்ஜெட்டில் கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.