போலி உற்பத்தி தொழிற்சாலை: தில்லியில் 3 போ் கைது
வடமேற்கு தில்லியின் ராம்புரா பகுதியில் இயங்கி வந்த விலையுயா்ந்த நிறுவன ஆடைகளின் போலி உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். 1,400-க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
வடமேற்கு தில்லியின் ராம்புரா பகுதியில் இயங்கி வந்த விலையுயா்ந்த நிறுவன ஆடைகளின் போலி உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். 1,400-க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில் மாா்ச் 25-ஆம் தேதி இந்த சோதனை நடைபெற்றது. அவா்கள் விலையுயா்ந்த நிறுவன ஆடைகளை போலியாக தயாரித்து அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களிடம் இதற்கான உரிய ஆவனங்களை இல்லை.
இதைத்தொடா்ந்து, 1,400க்கும் மேற்பட்ட போலி ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரமோத் யாதவ் (41), அமா் பிரசாத் (43) மற்றும் முகேஷ் குமாா் யாதவ் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த வலையமைப்பின் உறுப்பினா்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.