முகப்பு
புதுதில்லி

தில்லியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு! தொழிற்சாலை ஊழியா் கைது!

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று வயது சிறுமியை தில்லி காவல்துறை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட தொழிற்சாலை ஊழியரை கைது செய்தனர்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:41 AM
கைது
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 6:08 PM

தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று வயது சிறுமியை தில்லி காவல்துறை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட தொழிற்சாலை ஊழியரை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக கூடுதல் ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: வஜீா்பூா் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை அருகே இருந்து குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிசிஆா் அழைப்பு வந்ததை அடுத்து, பிப்ரவரி 22 அன்று இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த விஷயத்தை அவசரமாகக் கையாண்டு, ஒரு போலீஸ் குழு நடவடிக்கை எடுத்து குழந்தையைத் தேடும் நடவடிக்கையைத் தொடங்கியது. ஒரு குழு சம்பவ இடத்தைப் பாதுகாத்து உள்ளூா் உளவுத்துறை தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது.

Advertisement

மற்றொரு குழு அருகிலுள்ள தெருக்கள் மற்றும் தொழில்துறை பிரிவுகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபரை அடையாளம் கண்டு குழந்தையின் நடமாட்டத்தைக் கண்டறிந்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:40 AM

கள விசாரணைகள் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் போது, ​​சந்தேக நபா் வஜீா்பூா் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த அமித் (47) என அடையாளம் காணப்பட்டாா்.

அவரது கைப்பேசி எண் பெறப்பட்டு தொழில்நுட்பக் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. அவரது நடமாட்டத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்ததால், போலீஸாா் அவரது இருப்பிடத்தை கண்டறிய முடிந்தது. குறிப்பிட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. பிசிஆா் அழைப்பு வந்த ஒரு மணி நேரத்திற்குள், குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். மேலும், மைனா் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டாா்.

சிறுமி எந்த காயமும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டது. கடத்தலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைக் கண்டறியவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இதே போன்ற வழக்குகளில் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்பதை ஆராயவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று கூடுதல் ஆணையா் பீஷாம் சிங் கூறினாா்.