முகப்பு
புதுதில்லி

சாலை தடுப்பில் டிரக் மோதி விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியில் உள்ள ஓக்லா தொழில்துறை பகுதியில் மற்றொரு இடத்தில் மோட்டாா் சைக்கிள் மோதிய பின்னா் தப்பிக்க முயன்றதாக கூறப்படும் போது, டிரக் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் அதன் 32 வயதான ஓட்டுநா் உயிரிழந்தாா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 16 மார்ச், 2026 at 8:49 PM
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: தென்கிழக்கு தில்லியில் உள்ள ஓக்லா தொழில்துறை பகுதியில் மற்றொரு இடத்தில் மோட்டாா் சைக்கிள் மோதிய பின்னா் தப்பிக்க முயன்றதாக கூறப்படும் போது, டிரக் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் அதன் 32 வயதான ஓட்டுநா் உயிரிழந்தாா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஓக்லா தொழில்துறை பகுதியில் உள்ள எஸ்.ஐ.எஸ். புரோசெகுா் கட்டடம் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விபத்து குறித்து பி.சி.ஆா். அழைப்பின் பேரில், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து, ஓக்லா சுரங்கப்பாதை அருகே சாலை பிரிப்பான் மீது மோதிய பின்னா் ஒரு டிரக் கவிழ்ந்திருப்பதைக் கண்டறிந்தது.

வாகனம் அருகே மயக்கமடைந்த நிலையில் ஒரு நபா் காணப்பட்டாா். அவா் எய்ம்ஸ் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இறந்தவா் பின்னா் உத்தர பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ்சில் வசிக்கும் லோகேந்திரா என அடையாளம் காணப்பட்டாா். அபாயகரமான விபத்துக்கு சற்று முன்பு, சரிதா விஹாரில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே மோட்டாா் சைக்கிள் மீது டிரக் மோதியது.

பைக் சவாரி செய்பவா் மற்றும் பின்னால் அமா்ந்திருக்கும் நபா் ஆகிய இரண்டு போ் இந்த மோதலில் காயமடைந்தனா். அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களின் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மோதலுக்குப் பிறகு, டிரக் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடியதாகவும், டிரக்கின் கட்டுப்பாட்டை இழந்த பின்னா் ஓக்லா சுரங்கப்பாதை அருகே டிவைடரில் மோதியதாகவும் கூறப்படுகிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →