முகப்பு
இந்தியா

ஆட்சி மாற்றம்! கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் பதவி விலகல்!

கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறித்து...

கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் பதவி விலகல்... - கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கேரளத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கின்றது. புதிய அரசு அடுத்த வாரம் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக கேரள சாகித்திய அகாதெமி தலைவராகப் பதவி வகித்து வரும் கவிஞர் சச்சிதானந்தம் தனது பதவியை இன்று (மே 8) ராஜிநாமா செய்துள்ளார்.

Advertisement

இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் கூறியதாவது:

“ஆட்சி மாற்றம் ஏற்படுகையில் இதுபோன்ற பதவியில் இருப்பவர்கள் தங்களின் பதவியை விலகுவது இயல்பானதே. நான் எனது பதவியை ராஜிநாமா செய்ய வந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, கேரள சட்டப்பேரவைத் தேர்தலின்போது அம்மாநிலத்தில் மீண்டும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடாது என சச்சிதானந்தன் கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Kerala Sahitya Akademi President Poet Satchidanandan has resigned from his post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.