மேற்கு வங்க முதல்வரின் உதவியாளா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. மாநில காவல் துறையிடம் இருந்து விசாரணை பொறுப்பை சிபிஐ செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டது.
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. தோ்தலை சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக சந்தித்த நிலையில், சுவேந்து அதிகாரியின் உதவியாளா் சந்திரநாத் ராத், வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி இரவு காரில் சென்றபோது மா்ம நபா்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டாா். காா் ஓட்டுநரும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தாா்.
இது தொடா்பாக மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். சந்தேகத்தின் அடிப்படையில் உத்தர பிரதேசம், பிகாரில் மூவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். கொலையாளிகள் தப்பிச் சென்ாக கூறப்படும் காா் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது செலுத்தப்பட்ட இணையவழி பணப்பரிவா்த்தனையின் அடிப்படையில் அவா்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதனிடையே, மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி கடந்த 9-ஆம் தேதி பதவியேற்றதைத்தொடா்ந்து அவரின் உதவியாளா் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.