60 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய ஜுவாலா கட்டா
அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 60 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கியுள்ளதாக ஜுவாலா கட்டா சு குறிப்பிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 60 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கியுள்ளதாக ஜுவாலா கட்டா சு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் நடிகருமான விஷ்ணு விஷாலுக்கும் கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவர்களின் குழந்தைக்கு மீரா என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் பெயர் சூட்டினார். இந்த நிலையில் ஜுவாலா கட்டா தனது குழந்தைக்குப் போக எஞ்சிய தாய்ப்பாலை அரசு மருத்துவமனைகளுக்குத் தானமாக வழங்கி உள்ளார்.
அந்த வகையில் சுமார் 60 லிட்டர் தாய்ப்பாலை ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கியதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தானமாகப் பெறப்படும் வெறும் 100 மில்லி தாய்ப்பால், 1 கிலோ எடையுள்ள ஒரு சிறிய குழந்தைக்குப் பல நாட்களுக்கு உணவாக அமையும்.
Advertisement
இந்தத் தானம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பல குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடும். தாய்ப்பால் தானம் என்பது பாதுகாப்பானது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் மிகவும் அவசியமானது. மருத்துவ சிக்கல்கள் காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பல குழந்தைகளுக்கு அவர்களின் தாயின் பால் உடனடியாகக் கிடைப்பதில்லை.
இந்தத் தானமாகப் பெறப்படும் பால், குழந்தையின் ஆரம்பகால முக்கியமான நாள்களில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஊட்டச்சத்தையும் வழங்கி, ஒரு முக்கியப் பாலமாகச் செயல்படுகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.