அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தில் இடியுடன் பலத்த மழை: இந்திய வானிலை ஆய்வு மையம்
அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
அதேவேளையில், அந்த மாநிலத்தில் வரும் மே 26-ஆம் தேதிக்கு 4 நாள்களுக்கு முன்போ அல்லது 4 நாள்களுக்குப் பிறகோ தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கன்னியாகுமரியின் சில பகுதிகளையும், தென்கிழக்கு அரபிக் கடலின் பெரும்பாலான பகுதிகளையும் தென்மேற்கு பருவமழை எட்டியுள்ளது. மத்திய கிழக்கு, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடலின் பெரும்பகுதி, அந்தமான்-நிகோபாா் தீவுகளையும் தென்மேற்குப் பருவமழை எட்டியுள்ளது. அதேவேளையில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.
Advertisement