இது தெரியுமா? மின்னல் மின்னும்போது நேர்க்கோட்டில் இல்லாமல் வளைந்தும் நெளிந்தும் தெரிவது ஏன்?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
மின்னல் மின்னும்போது அது நேர்க்கோட்டில் இல்லாமல் கன்னாபின்னாவென்று வளைந்தும் நெளிந்தும் ஒழுங்கில்லாமல் தெரிவது ஏன்?
முதலில் மின்னல் எப்படி வருகிறது என்று பார்ப்போம். வானில் உள்ள மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால் மின்னல் உண்டாகிறது.
வானில் உயரத்தில் உள்ள மேகங்கள் (அதாவது மேல் பகுதியில் உள்ளவை) பாஸிட்டிவ் சார்ஜை கொண்டிருக்கின்றன. கீழே உள்ள மேகங்கள் நெகட்டிவ் சார்ஜை கொண்டவை. சாதாரணமாக வீட்டு உபயோக வயர்கள் இரண்டு வயர்களையும் சில மூன்று வயர்களையும் கொண்டிருக்கும். ஒன்று நெகட்டிவ் சார்ஜ், மற்றொன்று பாசிட்டிவ் சார்ஜ். மூன்றாவது எர்த் ஆகப் பயன்படுகிறது.
Advertisement
Advertisement
வான் மேகங்களிடையே இருக்கும் இந்த நெகட்டிவ் சார்ஜும் பாசிட்டிவு சார்ஜும் இணையும்போது மின்சாரம் உண்டாகிறது.
அதனால்தான் பளீரென்ற வெளிச்சம் உண்டாகிறது. இந்த மின்சாரத்தைக் கடத்துவதற்குக் காற்று தேவையல்லவா? இந்தக் காற்று ஒரே சீராக இருந்தால் மின்னலும் நேர்கோட்டில் பாயும்.
ஆனால் எப்போதும் காற்று சீராக இருப்பதில்லை, வீசுவதில்லை என்பதால், மேலிருந்து வரும் மின்சாரக் கதிர்களும் கன்னா பின்னாவென்று பாய்வதால்தான் இந்த நிலை ஏற்படுகிறது.
Why does lightning appear as a chaotic, irregular line, bending and twisting, instead of a straight line, when it flashes?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.