முகப்பு
குழந்தைகள் உலகம்

இது தெரியுமா? ரயிலில் ஜன்னல் கம்பிகள் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக இருப்பது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 11:02 AM
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

ரயில் ஜன்னல்களில் இருக்கும் கம்பிகள் ஏன் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருக்கிறது?

ரயில் வண்டியில் ஜன்னல்கள் இருப்பதால் நாம் வெளியே இருக்கும் இயற்கைக் காட்சிகளை, வண்டி ஓடும்போதுகூட ரசிக்க முடிகிறது. மேலும் நமது ஊர் வந்து விட்டதா என்றும் கவனிக்க முடிகிறது.

தொடர்வண்டி சாளரங்களில் கம்பிகள் செங்குத்தாக இருந்தால், வண்டி விரைந்து செல்லும்போது, பெட்டிகளுடன் கம்பிகளின் பக்கவாட்டு நகர்வால், ஜன்னல் மூலம் வெளிப்புறக்காட்சிகளைக் காண்பது தடைப்பட்டு, தெளிவாகத் தெரியாது.

நமக்கும் அது தலைவலிலியை ஏற்படுத்தும். கிடைமட்டமாக இருந்தால் இந்தத் தொல்லை கிடையாது.

இது தவிர, மற்றொரு முக்கிய காரணம், கம்பிகள் செங்குத்தாக அமைக்கப்பட்டிருந்தால் ஜன்னல் மூடிகளை இயக்குவதும் கடினமாகி விடும்.

summary

Why are the bars on train windows mounted horizontally instead of vertically?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.