இது தெரியுமா? ரயிலில் ஜன்னல் கம்பிகள் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக இருப்பது ஏன்?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
ரயில் ஜன்னல்களில் இருக்கும் கம்பிகள் ஏன் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருக்கிறது?
ரயில் வண்டியில் ஜன்னல்கள் இருப்பதால் நாம் வெளியே இருக்கும் இயற்கைக் காட்சிகளை, வண்டி ஓடும்போதுகூட ரசிக்க முடிகிறது. மேலும் நமது ஊர் வந்து விட்டதா என்றும் கவனிக்க முடிகிறது.
தொடர்வண்டி சாளரங்களில் கம்பிகள் செங்குத்தாக இருந்தால், வண்டி விரைந்து செல்லும்போது, பெட்டிகளுடன் கம்பிகளின் பக்கவாட்டு நகர்வால், ஜன்னல் மூலம் வெளிப்புறக்காட்சிகளைக் காண்பது தடைப்பட்டு, தெளிவாகத் தெரியாது.
Advertisement
Advertisement
நமக்கும் அது தலைவலிலியை ஏற்படுத்தும். கிடைமட்டமாக இருந்தால் இந்தத் தொல்லை கிடையாது.
இது தவிர, மற்றொரு முக்கிய காரணம், கம்பிகள் செங்குத்தாக அமைக்கப்பட்டிருந்தால் ஜன்னல் மூடிகளை இயக்குவதும் கடினமாகி விடும்.
Why are the bars on train windows mounted horizontally instead of vertically?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.