சிரி... சிரி...
அந்த ஹோட்டலில் 'தயவு செய்து தும்மாதீர்கள்' என்று போர்டு வச்சிருக்காங்களே, ஏன்?'
'அந்த ஹோட்டலில் 'தயவு செய்து தும்மாதீர்கள்' என்று போர்டு வச்சிருக்காங்களே, ஏன்?'
'பேப்பர் தோசை பறந்துவிடுமாம்!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க வாசலோட திரும்பிப் போய்ட்டாங்களா, எப்படி ?'
'காலியான சிலிண்டரை ஆட்டிச் சத்தம் எழுப்பினேன்... போயிட்டாங்க!'
'மறதியில நாங்க வீட்டை பூட்டாம திறந்து வெச்சு வந்துட்டோம்னு போன்ல கூப்பிட்டுச் சொல்றீயே, நீ யாரு?'
'திருட வந்தவன் சார், பூட்டை உடைக்காமல் திருட கஷ்டமா இருக்கு, அதான் !'
-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.
'என்னம்மா இது... டிபன் கேட்டா வெறும் தட்டு கொண்டு வந்து வைக்கறீயே... காபி கேட்கப் பயமா இருக்கு..!'
'என்ன பயம்?'
'காலி டம்ளர் டபரா வந்தாலும் வரும்!'
' போன்ல ரொம்ப நேரம் பேசுவாரோ?'
'ஆமாம், ராங் நம்பர் ஆனாலும் பத்து நிமிடம் பேசுவார்!'
'முகத்தை உம்முன்னு வச்சிக்காதே!'
'சரி... உர்ருன்னு வச்சிக்கிறேன்!'
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'வரனுக்கு பாட்டைவிட காமெடி தான் பிடிக்கும்!'
'அதுக்காக, பெண் பாக்க வந்துட்டு, 'பாட வேணாம்... வாழைப்பழ காமெடியை மோனோ ஆக்ட் பண்ணுமான்னு சொன்னா எப்படி?'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'இவ்வளவு வரதட்சிணை கேக்கறாங்களே... பையனுக்கு அப்படி என்னதான் இருக்கு?'
'ஏகப்பட்ட கடன் இருக்குன்னு பேசிக்கிட்டாங்க, சார்!'
'இந்த வீட்டுல வேலையை விட்டுட்டு எதிர் வீட்டுல வேலைக்குச் சேரப் போறீயா, ஏன்?'
'இவங்க வீட்டுக்கு அடிக்கடி விருந்தாளிங்க வந்துகிட்டே இருப்பாங்களாம்... ஆனா, இவங்க மட்டும் குடும்பத்தோடு எங்கேயும் போகவே மாட்டாங்களாம்... அதான், வரலைன்னு சொல்லிட்டேன்!'
'சார், அது காபி இல்லே... சாம்பார்!'
' காபியை விட இது நல்லா இருக்குப்பா!'
'ரெண்டு நாளா எனக்கு மனசே சரியில்ல...'
'நான் வேணும்னா நாலு நாள் எங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரவா?'
'ராத்திரி பயங்கரமான கனவுங்க...!'
'அதுக்காக மூணு தடவை 'தூ...தூ ...'ன்னு காறித் துப்ப என் முகம்தான் கிடைச்சிதா உனக்கு?'
'வக்கீல் சார்... என் மனைவியோட தொண
தொணப்பு தாங்கல...!'
'இதுக்குப் போய் விவாகரத்தா? பேசி சரி பண்ணிக்கலாம் சார்...!'
'பே...சி... யா....?'
'கண்ணு சிமிட்டிக்கிட்டே இருக்கே, ஏன் டாக்டர்?'
'எப்பவும் அப்படி இருக்கா... லேடீஸை பார்க்கிறப்ப மட்டும் அப்படி இருக்கா சார்?'
'கப்பம்தான் செலுத்திவிட்டோமே... மறுபடியும் என்ன ஓலை அமைச்சரே?'
'பயப்படாதீர்கள் மன்னா... கப்பத்தை உடனடியாகக் கொடுத்ததை பாராட்டி வந்த ஓலை இது!'
-வி.ரேவதி, தஞ்சை.