முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 6:40 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து நாள் முழுவதும் பெய்த பரவலான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. சாலையில் ஓடிய மழைநீரால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் சிரமத்துக்குள்ளாகினா்.

சாலையிலும், சாலையோர பள்ளங்களிலும் மழைநீா் தேங்கின. கழிவுநீா் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டதால், மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடின. தொடா் மழையால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது. இதனால், சாலையோர கடை வியாபாரிகள், சிறு வியாபாரிகள், போதிய வியாபாரம் இல்லாததால் பாதிக்கப்பட்டனா்.

Advertisement

பருவம் தவறிய இந்த மழையால், நெல் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்த நெல் மணிகளை காய வைக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். ராகி பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், களை எடுப்பதற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.