திருநள்ளாறு கோயிலில் மத்திய ரயில்வே அமைச்சர் கே.எச்.முனியப்பா தரிசனம்
காரைக்கால், டிச. 17 : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா சனிக்கிழமை தரிதனம் செய்தார். காரைக்கால் முதல் சென்னைக்கு புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில்பாத
காரைக்கால், டிச. 17 : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா சனிக்கிழமை தரிதனம் செய்தார்.
காரைக்கால் முதல் சென்னைக்கு புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில்பாதையில் ரயில் போக்குவரத்தை இயக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, மத்திய ரயில்வே இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா சனிக்கிழமை காலை காரைக்கால் வந்தார்.
காரைக்காலில் இருந்து திருநள்ளாற்றில் உள்ள ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு அமைச்சர் சென்றார். அவரை கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம் வரவேற்று சன்னதிகளுக்கு தரிசனம் செய்ய அழைத்துச் சென்றார். ஸ்ரீ சொர்ணகணபதி, ஸ்ரீ சுப்ரமணியர் மற்றும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், அருள்மிகு பிரணாம்பிகை சன்னதிகளில் அமைச்சர் வழிபாடு செய்தார்.
தனி சன்னதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ சனீஸ்ரபகவானை அமைச்சர் வழிபாடு செய்தார். சன்னதியில் எள்தீபம் ஏற்றியும், சனீஸ்வரனுக்கு கறுப்பு வஸ்திரம் அணிவித்து மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. தரிசனத்தில் கலந்துகொண்ட அமைச்சருக்கு சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.